அபார்ட்மெண்ட் வாடகை! அசைவ நகைச்சுவை நேரம்!!

ஒரு வர்த்தகர் (businessman) மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு அன்றிரவு காம இன்பம் அளிப்பதானால் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார். அவளும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து அந்த இரவை ஆனந்தமாகக் கழித்தனர். காலையில் அந்த வர்த்தகர் அவளிடம் ‘நான் என் செக்ரடரியிடமிருந்து அவள் இரவு திரும்பிப் போவதற்கு முன்னால் என் பணப்பையை வாங்கிவைத்துக்கொள்ள மறந்துவிட்டேன், அதனால் கையில் பணம் இல்லை. காலை ஆபீஸ் போனதும் என் செக்ரெடரியிடம் சொல்லி உனக்கு ஒரு காசோலை (cheque) அனுப்பச் சொல்கிறேன். அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
சொன்னபடியே ஒரு காசோலை வந்தது – ஆனால் அது ஆயிரம் ரூபாய்க்கு அல்ல, ஐந்நூறு ரூபாய்க்கு மட்டும்தான். அதனுடன் ஒரு கடிதம் இருந்தது:
“உங்கள் அபார்ட்மெண்டுக்கு வாடகையாக ரூபாய் 500/= இணைக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரூபாய் ஆயிரம் அனுப்பாமல் பாதித் தொகை அனுப்புவதற்கான காரணங்கள்:

1. இதுவரையில் யாருக்கும் விடப்படாத புது அபார்ட்மெண்ட் என்று நினைத்தேன். அப்படி இல்லை, பலமுறை வாடகைக்கு விடப்பட்ட அபார்ட்மெண்ட்தான் என்று தெரிகிறது.
2. அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பம் இருக்கவில்லை.
3. அது கச்சிதமான சிறு அபார்ட்மெண்டாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் விஸ்தாரமாக, எனக்கு வேண்டிய இடம் போக சுற்றி வெற்றிடம் இருந்தது.
எனவே பேசினதில் பாதித்தொகை போதுமென்று கருதுகிறேன்.”
அடுத்த நாளே அவருக்கு அந்த 500 ரூபாய்க்கான காசோலை திரும்பி வந்துவிட்டது. அதனுடன் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தின் வாசகம்:

1. இவ்வளவு அழகான அபார்ட்மெண்டை உங்கள் ஒருவருக்காக கட்டிமுடித்த நாளிலிருந்து காலியாக வைத்திருப்பேன் என்று எதிர்பார்ப்பது மதியீனம்.
2. அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பத்தை உண்டுபண்ண சரியான ஸ்விட்சை (switch) ஆன் (on) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அது என் தவறல்ல.
3. என் அபார்ட்மெண்ட் கச்சிதமாக இருக்கவேண்டிய அளவில்தான் இருக்கிறது. என்ன, அதை சரியாக நிரப்ப உங்களிடம் தேவையான அளவு சாமான் (furniture) இல்லாததால் வெற்றிடமாகத் தெரிகிறது.
எனவே நீங்கள் அனுப்பிய இந்த 500 ரூபாய்க் காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஒப்பந்தப்படி முழுத்தொகையையும் அனுப்பிவைக்கவும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.