கால்நடைப் பண்ணையில்! அசைவ நகைச்சுவை நேரம்!!

பேராசிரியர் ஜோசஃப் ஒரு கால்நடை ஆராய்ச்சிப் பண்ணையில் இயக்குனர். அவர் பண்ணையிலிருந்த ஒரு காங்கேயம் காளை அந்த ஏரியாவில் பிரசித்தி வாய்ந்தது. அக்கம்பக்கத்திலிருந்த எல்லா கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்கள் பசுக்களை அந்தக் காளையிடம் சினையாக்க (கருத்தரிக்க) அழைத்துக் கொண்டுவருவார்கள். அந்தக் காளையும் அயராமல் அந்தப் பசுக்களை ‘ஏறி’ சினைப்பிடிக்க ஒத்துழைத்தது. (அதாவது, ஓத்துழைத்தது).
ஒருநாள் அந்த இயக்குனரின் மனைவி பண்ணையை வேடிக்கை பார்க்க வந்திருந்தாள். அந்தக் காங்கேயம் காளை ஒரு பசுவைப் புணருவதைப் பார்த்தாள். அங்கிருந்த ஒரு ஊழியனிடம் (stockman), “ஏம்பா, இந்தக் காளை ஒரு நாளுக்கு ஒரு தடவைதான் இப்படி பசுவை ஏறுமா?” என்று கேட்டாள்.
அவன் சொன்னான்: ”அய்யய்ய, அது எப்படிம்மா சரிவரும்? ஒரு நாள்ல பத்துப் பதினஞ்சு தடவை செய்யும்மா.” உடனே மிஸஸ் ஜோசஃப்,

“ஓ அப்படியா, இதைப் போய் உன் இயக்குனரிடம் சொல்”என்றாள்.

அவன் உடனே சென்று அப்படியே இயக்குனரிடம் தெரிவிக்க, அவர், “ஏம்ப்பா, அது ஒரே பசுவையா ஒரு நாள்ல பத்து பதினஞ்சு தபா கூடும்?” என வினவினார்.
“அய்யய்ய, அதெப்படிங்க? பத்துப் பதினஞ்சு வெவ்வேறு பசுவுங்கள தான்” என்றான் ஊழியன். இயக்குனர் சொன்னார்; “நீ போய் அதை அப்படியே அவங்ககிட்ட சொல்லுப்பா.” !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.