ஆபீசில் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவன் அருகிலிருந்த தன் வீட்டுக்கு திரும்பும் போது கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணியாகிவிடும். அனேகமாக எல்லா நாட்களிலும் வழியில் ஒரு விளக்குக் கம்பத்தின் கீழ் அதீதமான அலங்காரம் செய்துகொண்டு ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருப்பாள். ‘சார், வரீங்களா என்னோடு, ஒரு நைட்டுக்கு 500 ரூபாதான்” என்று ஒவ்வொரு முறை அவன் அவளைக் கடந்து செல்லும்போதும் அவனைக் கூப்பிடுவாள்.
இவங்கள்ளாம் ‘வேணாம்’-னு சொன்னா “யோவ், நீ என்ன ஒம்போதா?” என்பாங்க. வேறு ஏதாவது அசிங்கமாக ஏசுவார்கள். அதனால, அபடிச் சொல்லாமல், ரேட் படியாததுபோல போயிடணும். “500 ரூபாயா? உனக்கா, சும்மா ஒரு 50 ரூபாதான் தரலாம்’ என்பான்.”அம்பது ரூபாய்க்கு எவளாவது பாக்க சகிக்காத ஒரு வயசானவ தான் வருவா போ’ என்று சொல்வாள். இவனும் இதோடு விட்டதேன்னு அவளை கடந்து வந்துடுவான்.
ஒருநாள் அவன் அங்கே குடியிருந்த ஒரு டாக்டரிடம் தன் மனைவியைக் காட்டி, மருந்து வாங்கிக் கொள்வதற்காக இரவு 9 மணிக்கு அந்த விளக்குக் கம்பத்தைக் கடந்து போகவேண்டி இருந்தது. அவன் மனைவி காய்ச்ச்லில் உடல் நடுங்க, அவனோடு சென்றாள். அப்போது வழக்கமாக அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அவனையும் அவன் மனைவியையும் பார்த்துவிட்டு சொன்னாள்: “பாத்தியாய்யா. ஒன் அம்பது ரூவாக்கு இப்படிப்பட்ட வயசான அசிங்கம் தான்யா கிடைக்கும்.”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.